பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீ இவ்வளவு காலம்
எங்கிருந்தாய்?

பதினைந்து பதினாறு கார்த்திகைக்குப்பின்
ஒரு நிலவறையிலிருந்து
பதப்படுத்தப்பட்டு வெளிவந்த
வீறுமிக்க மதுவைப் போல் ...

பதினாறு பதினேழு மார்கழிக்குப் பின்
ஒரு களங்கமற்ற இதயத்தில்
கருவாயிருந்து
கலை அலங்காரத்தோடு உருவாகி வந்த
ஓர் உயிருள்ள காவியம் போல் ...

பதினேழு பதினெட்டுத் தைக்குப் பின்
ஒரு சின்னஞ் சிறிய தீவில்
ஒதுங்கியிருந்து
வைரக் குப்பையோடு கடல்வாசல் வந்த
ஒரு சுதேசிக் கப்பலைப் போல் ...

நீ என் கண்ணைக் கவர்கிறாய்,

உன் வருகையால்
இன்பச் சிகரத்தைக்
கையால் எட்டித் தொடுகிறேன் ...

என்றாலும்
இவ்வளவு காலமும்
உன்னைக் காணாமல்
வீணாகப் போய்விட்டதே
என்று எண்ணிக்
கவலைப் பள்ளத்தில் கால் வழுக்கி
விழவும் செய்கிறேன்.

 

2

12