பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நீரிலே நெடுநாட்களாகக் கிடந்தாலும்
கருங்கல் கரைவதில்லை;

ஓராயிரம் இளம் பார்வைகளில்
மூழ்கியும்
முன்பெல்லாம்
என் மனம் கரையவில்லை.

இன்று - இது என்ன அதிசயம்!

ஒரே வினாடியில்
உன் ஈரப் பார்வையில்
என் மனம் உப்பாகி விட்டதே!

 

6

16