பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உன்னால் தினமும் தவிக்கிறேன்.
ஒவ்வொரு கணமும் துடிக்கிறேன்
என்பது உனக்குத் தெரியாதா?

தெரிந்தும்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்
இதமாக ஒன்றும் சொல்லாமல்
விரைந்து செல்கிறாயே!
காயப்படுத்திவிட்டுக்
கட்டுப் போடாமல்
பறந்து செல்கிறாயே!

நடைவண்டி பழகும்
நாத சொரூபம் மேல்
மிதிவண்டியை ஏற்றிவிட்டு
வேக வேகமாக ஓடும்
கல் நெஞ்சக் காரனைப் போல்
நடந்து கொள்கிறாயே!

இது நியாயமா?

 

16

28