இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என் மூதாதை ஒருவன்
பராசக்தியிடம் வரம் கேட்டான்.
காணி நிலம்
மாட மாளிகை
தென்னந் தோப்பு
அது இது என்று வேண்டி
இறுதியில்
ஒரு பத்தினிப் பெண்ணைக் கேட்டான்
நான் கேட்டால்
உன்னை மட்டும்தான் கேட்பேன்.
உன்னைப் பெற்றால்
உலகத்தில் உள்ள
எல்லாம் பெற்ற மாதிரி தானே!
28
44