பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பால்யத்தில்
என் பாட்டி என்னைத்
திருவிழாவுக்குக்
கூட்டிக் கொண்டு போகும் போது
கண்டகண்ட மிட்டாய்களைக் காட்டி
வாங்கித்தா என்று
அடம் பிடிப்பனாம், அழுவேனாம்.

இப்போது
என் பாட்டி இல்லையே.

இந்தக் கற்கண்டை
வாங்கித்தா
என்று அழுது பார்க்கலாம்.

இப்போது
என் பாட்டி இல்லையே!

 


29

45