பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மதுரைவீரன் பார்த்த மயக்கத்தில்
ஒரு மதுரக்காட்சி...

நீ ஆற்று வெள்ளத்தில்
தத்தளிக்கிறாய்.
என்னைக் கரைசேர்க்கக் கூடாதா
என்று கதறுகிறாய்.

நான் மீன் குஞ்சாகிறேன்.
துள்ளிக் குதிக்கிறேன்.
தூண்டிலாய் மாறித்
தூக்கி வருகிறேன்.
நீ நன்றியை உதிர்த்துவிட்டு
நடையைக் கட்டுகிறாய்.

நான் அபயக்குரல் கொடுக்கிறேன்;
“என்னைக் கரைசேர்க்கக்கூடாதா?”

 

51

74