இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆராதனை
சாவ தெனில்நான் சாவேன் உன்றன்
சந்தி தானத்தில் - அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணிர்ப்
பூவி மானத்தில்
ஆரா தனையில் ஆருயிர் வாசனை
அழகுகள் சொரிந்தேனே - தினமும்
பாரா யணமாய் உன்திருப் பெயரைப்
பாடித் திரிந்தேனே!
வேகம் குறைய வில்லை; மேலும்
வேதனை கூட்டாதே - என்றன்
பாகம் பிரியா நாயகி யேஉன்
பக்தனை வாட்டாதே!
முன்போர் சமயம் தீண்டி யவன் என
முகத்தை வெறுக்காதே - பொங்கும்
அன்போர் சமயமும் அடங்காது; உனைச்சரண்
அடைந்தேன் மறுக்காதே
தேவி, உனதருள் தேடிவந் தேன்;உயிர்த்
தீர்த்தம் கொடுப்பாயே - இல்லை
‘பாவிஇவன்’ எனப் பட்டால் எனை நீ
பலியாய் எடுப்பாயே!
சாவ தெனில் நான் சாவேன் உன்றன்
சந்தி தானத்தில் - அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணிர்ப்
பூவி மானத்தில்!