பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஒரு நண்பகலில்,
அந்தத் தென்னந் தோப்பில்
நீ நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாய்.

உலகத்தின்
அமர செளந்தரியம் அனைத்தும்
உன்னிடம் கொலுவிருப்பதைத்
தரிசித்து மெய்மறக்கிறேன்.

புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின்
கூட்டுப் பண்ணைகளைப்
பார்த்து மலைக்கும்
ஒர் இந்திய உழவனைப் போல் வியப்படைகிறேன்;
அந்த வியப்பில் ஆழ்ந்தபடியே
உன்னை எழுப்பாமல், நிற்கிறேன்.

அப்படி எழுப்பினால்,
ஒரு கல்லை வீசியதும்
வரிசை வரிசையாய்
அமர்ந்திருக்கும்
பறவைகள் சிதறிப்
பறப்பதைப் போல்
உன் துயில் அழகுகள்
சிதறிப் பறந்து விடுமே
என்று அஞ்சுகிறேன்.


 

55

80