இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான்
“தலைநகரில்
எழுத்தாளர்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள்;
என்னையும் அழைத்திருக்கிறார்கள்”
என்கிறேன்.
நீ
“என்ன பரிசு”
என்று கேட்கிறாய்.
"இரண்டாம் பரிசுதான்."
நீ என்ன நினைத்தாயோ
செவ்விதழைக் கடித்தவாறு
“விடுங்கள்- நான் முதற் பரிசு தருகிறேன்...”
என்கிறாய்.
நான் என் கண்களை
உன் கண்களில் செருகியவாறு,
“என் இரண்டாம் பரிசே! உனக்கு நன்றி”
என்கிறேன்.
59
84