பக்கம்:கனவுப்பாலம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

戈0 கனவுப் பாலம் இவ8ளத் தன் வழிக்குக் கொண்டு வருவது இந்த ஜன்மத்தில் நடக்கிற காரியமல்ல என்ற முடிவுக்கு வந்தான் கோபால், காலேயில் அயாகோவைச் சந்தித்த போது இருந்த நம்பிக்கையும் உற்சாகமும் இப்போது தான் பார்த்த அஸ்தமனக் காட்சி போல் அடங்கி விட்டது.

அப்புறம்...? கோபால் பேச்சில் சுரத்து இல்லை. வாருங்கள்; இன்றிரவு அதோ தெரிகிறதே, அந்த ஒட்டலில் தங்கி, காலேயில் சூரியோதயம் பார்த்து விட்டு. டோக்கியோ திரும்பலாம். இது உதயசூரியன் நாடு!’ என்ருள் கிஜிமா -

இருவரும் அந்தப் பெரிய ஒட்டலே நோக்கி மெதுவாக நடந்தார்கள். அங்கே அயல்நாட்டுப் பயணிகள் கூட்டம் <ரிஸப்ஷன் டெஸ்க்"கை மொய்த்துக் கொண்டிருந்தது. ஒட்டல் வாசலில் ஏராளமான கார்கள். *இதற்கு முன் இங்கே இவ்வளவு கூட்டத்தை நான் டிார்த்ததில்லை’.என்ருள் கிஜிமா. கோபால் மூன்ருவது மாடியில் அறை எடுத்துக் கொண்டான். கிஜிமாவுக்கு ஐந்தாவது மாடியில் இடம் விடியற் காலையில். அந்த ஓட்டலின் பின்புறத் தோட்டத்தில் திடீரென ஒரு பரபரப்பு: திகில் நிறைந்த கூக்குரல்கள்! கிஜிம்ா மாடியி லிருந்து கீழே விழுந்து செத்துக் கிடந்தாள். தலேக்கருகே ரத்தம் உறைந்து கிடந்தது. அடுத்த சில நிமிடங்களில் அவளேச் சுற்றிலும் ஒரு சிறுகூட்டம், மூன்ருவது மாடியில் தங்கியிருந்த கோபாலேக் காணவில்லை. போலீஸார் அவனைத் தேடிச் சென்ற போது அந்த அறை திறந்து கிடந்தது. ...அம்மாவும் கோபாலும் இன்று பகலுக்குள் வந்து விடுவார்கள். இத்தனே நேரம் தீவை விட்டுப் புறப்பட்டிருப் பார்கள். கோபால் வந்ததும் அவரை மெளண்ட் ஃப்யூஜிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/18&oldid=768610" இலிருந்து மீள்விக்கப்பட்டது