பக்கம்:கனவுப்பாலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*32 கனவுப் பாலம் 'நீ வேலை செய்யும் ஒட்டலில் 515-ம் நம்பர் அறையில் கிஜிமா என்பவள் தங்கியிருக்கிருள். அவளே நீ கொன்று விட்டால் உனக்கு ஏராளமான பணம் தருகிறேன்?’ என்ருர். நான் தயங்கினேன். 'யோ சிக் காதே! இவ்வளவு பணம் உனக்கு யார் கொடுப்பார்கள்? இந்தா பிடி!' என்று கூறி இதோ இந்த லாக்கரில் உள்ள பனம் அத்தனையும் என்னிடம் கொடுத்து போய் வேலயை முடி’ என்ருர், அத்துடன் கொகில செய்வதற்கான சில யோசனேகளும் சொல்லித் தந்தார். அவர் யோசனைப்படி என்னுடைய இன்ைெரு நண்பருக்குப் போன் செய்தேன். ஒகி ஐலண்டுக்கு வரச் சொன்னேன். அவர் தங்கிய அறையிலிருந்து அவருக்குத் தெரியாமல் இரண்டு கைக் குட்டைகளே எடுத்துக் கொண்டேன். - விடியற் காலம் கிஜிமா அறைக கதவை நான் தட்டிய போது அவர் யார்?’ என்று கதவைத் திறக்காமலே கேட்டார். நான் தான் ஒட்டல் ஸர்வெண்ட்’ என்று கூறிக் .கதவைத் திறக்கச் சொன்னேன். பெண்குரலாயிருந்ததால் அவள் பயமின்றித் திறந்து என்ன வேண்டும்?’ என்று கேட்டார். 'டுத் பேஸ்ட் கொண்டு வந்திருக்கிறேன்?? என்றேன். அவர் அதை என்னிடமிருந்து வாங்கி மேஜையின் மீது வைத்துவிட்டு, ஜன்னல் பக்கம் போய் நின்று கிழக்கே பார்த்தார். 'இன்னும் சிறிது நேரத்தில் அழகான் சூரியோதயக் காட்சி பார்க்கலாம். இங்கே வந்து அடிவானத்தைப் பார்’ என்று என்னே அருகில் அழைத்தார். . நான் அவர் பக்கத்தில் போய் நின்றேன். வேடிக்கை பார்ப்பது போல் பாசாங்கு செய்தேன். அவர் ஏமாந்திருந்த சமயம் பார்த்து சட்டென்று அவரைக் கீழே தள்ளிவிட்டேன். அப்போது என் கையில் எஸ். கே. எழுத்துக்கள் கொண்ட கர்ச்சிப் வைத்திருந்தேன். கிஜிமா, தான் கீழே விழாமல் தப்புவதற்காக என் கைகளேப் பற்றிக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/78&oldid=768675" இலிருந்து மீள்விக்கப்பட்டது