பக்கம்:கனிச்சாறு 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87


நாட்டுக் குள்ளே இவனைப் போல
நல்லவர் உளரோ? - தமிழ்
நயத்தைப் படித்த இவனின் உள்ளம்
கயமையின் களரோ?
பாட்டுப் புலவன் வாய்மை உணரும்
பண்பும் அற்றவனோ? - நறும்
பசுமைத் தமிழை இழிவில் தோய்க்கும்
பழியைக் கற்றவனோ?

-1984
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/114&oldid=1513075" இலிருந்து மீள்விக்கப்பட்டது