பக்கம்:கனிச்சாறு 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 கனிச்சாறு – முதல் தொகுதி

64  வெம்புலியே வாளெடு !

நம்மை, நம் நாட்டை
நலம் பல பேணி
நாளும் காப்பது மொழி!
நல்லன காட்டித் தீயன களைய
உதவும்; நமக்கது விழி!

செம்மைத் தமிழ் மொழி
சீர்குலை வதனால்
செந்தமிழ் நாடுறும் பழி!
சிற்றறி வுடையோர் இந்தியைப் புகுத்தச்
சீறுவர்; நீயதை ஒழி!

வெம்மைக் கொடும் போர்
விளையினும், மொழிக்கென
வெற்புத் தோளினைக் கொடு!
வீணரை வீழ்த்து! வெற்றியை வாழ்த்து!
வெம்புலியே வாளெடு!

இம்மை மறுமை யென்
றேபல பிதற்றி
இழிவார் பலர்; அதை விடு!
இழப்பது வாழ்வே என்னினும் அவர்மொழி
ஏற்பது தீது! உயிர் விடு!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/119&oldid=1419083" இலிருந்து மீள்விக்கப்பட்டது