பக்கம்:கனிச்சாறு 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  103

பன்மொழி வழங்கும் பாரத நாடு
நன்மொழி நவின்று நல்லன செய்யும்
உயர்ந்தோர் என்பரால் ஒற்றுமை பெறாமல்,
நயமிலாச் சிறுமொழி ஒன்றினால் மட்டும்
ஒற்றுமை பெறுமெனில் உயர்ந்தோர்க் கிழிவே!
பெற்ற உரிமை இந்தியால் பிறந்ததா?
இந்தியால் ஒற்றுமை இயலும் என்றால்
இந்தியை மறுப்பவர் இருந்திடு வாரா?
140
இப்படிக் கேட்பதே எங்ஙன் பிழைபடும்?
ஒப்பிலாக் கருத்தை உணர்த்துதல் எப்படி?

அரசியல் செய்வார் அனைவரும் ஒப்பும்
முரணிலாக் கருத்தை முழுதும் ஆய்ந்து
நாடுதல் அன்றோ நல்லறம்! அதனால்
கேடுறும் ஆங்கொரு கூட்டம் என்னில்
மற்றவர் கருத்தை மாற்றி வேறோர்
உற்ற செயலுக் குழைத்தலே முறைமை!
எக்கருத் தினையும் எதிர்ப்பவர் உளரெனில்
தக்க படிக்கவர் தரும்புது மறுப்பை 150
ஒக்க ஆய்தல் அன்றோ உயர்வு!
செக்கு மாடுபோல் சிறந்ததா ஒன்றையே
அழுத்திப் பிடிப்பதால் அதன்வலி மிகுமா?
விழுப்ப மிலாதவர் வினையது வாகலாம்!

இந்தியால் தமிழ் கெடும் என்றுரை செய்தால்
எந்த வகைகெடும்? எவரதைச் சொன்னார்?
சொன்னவர் மொழித்திறம் கல்விச் சிறப்போ
டன்னவர் கொண்ட அரசியல் அறிவு,
நாட்டுப் பற்றென நால்வகை யாகக்
கேட்டறிந் ததன் பின் கிளத்திய உரைக்கு 160
மாற்றுரை அன்னவர் மனங்கொள உரைத்தே
ஆற்றுதல் அன்றோ அரசியல் திறமை!

இவ்வகை இன்றி “ஆஆ ஊஊ
எவ்வகை அவரென் கருத்தை எதிர்க்கலாம்?
ஆச்சா போச்சா? ஆரவர் தண்டலர்?
ஓச்சுக சட்டம்; உமததி கார”மென்
றார்ப்புரை செய்தே, அரைகுறை ஆய்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/130&oldid=1419250" இலிருந்து மீள்விக்கப்பட்டது