பக்கம்:கனிச்சாறு 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 கனிச்சாறு – முதல் தொகுதி

6  முத்தமிழ் முப்பது!

1. பாட்டுப் பத்து

1.மூத்த வுணர்வின் முதிர்வசையால் உள்ளணுக்கள்

யாத்த வரியிசையே பாட்டு.

2.வல்லார் நினைத்த நினைவலைகள் வந்துறுத்தச்

சொல்லால் எதிரொலித்தல் பாட்டு.

3.காற்றின் நுணித்தாய்க் கருத்தலைகள் உள்ளூறி

ஊற்றுப் பெருக்குவதே பாட்டு!

4.கிடந்த வொழுங்கின் உணர்வலைகள் நெஞ்சில்

நடந்த வொழுங்கிசையே பாட்டு.

5.ஊன்றும் இறையொளிமூண் டுள்ளக் கனலெழுப்பத்

தோன்றும் உணர்வொலியே பாட்டு.

6.மூண்ட நெடுநினைவால் முற்றும் உளக்கனியைக்

கீண்ட வொலியூற்றே பாட்டு.

7.அண்ட வெளியொலியை ஆகத் தணுப்புகுத்தி

விண்ட வுணர்வொழுங்கே பாட்டு.

8.தோற்றம் நிலைப்பொடுக்கம் என்னுந் தொலையுணர்வின்

ஏற்றம் விளக்கொலியே பாட்டு.

9.அணுவை அணுத்துடிப்பை ஆன்றெ வொளியின்

அணுவை ஒலியாக்கல் பாட்டு.

10.என்றும் இருப்ப தினியொன் றிருப்பதுபோல்

என்றும் இருப்பதுவே பாட்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/45&oldid=1419274" இலிருந்து மீள்விக்கப்பட்டது