பக்கம்:கனிச்சாறு 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  23


பனிக்குன் றதிர்த்த பழம்பே ரரசர்
பணிந்துயர்த்த
இனிக்குந் தமிழ்ப்பா வெழுதும் இணையறு
வின்புலவோர்
கனிக்குந் நிகராப் பலநூல் எழுதிக்
களித்ததெலாம்
தனிக்குன் றணையாய் இனிக்காண் குவமோ
தவழ்கொழுந்தே!

கொழுங்கட் பிழிவே! நறவே! நறுஞ்சுவைப்
பால்கலந்த
பழங்கெழு ஊணே! உடலே! உயிரே!
பணிவொடுசீர்
வழங்கெஞ் சிறுநா வளரின் னிசையே!
இயல்நடமென்
றெழுங்கலை யேமகிழ் வேவுல கேயிணை
யில்லையன்றே!

-1958
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/50&oldid=1419315" இலிருந்து மீள்விக்கப்பட்டது