பக்கம்:கனிச்சாறு 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  53



30  தமிழ் ஆர்ப்பரிப்பா ? வெட்கம்!


தமிழரசின் அவைத்தலைவர்
செய்தித்தாள் நடத்துகின்றார்;
'தினத்தந்தி' 'ராணி' என்றே!

உமிழ்கின்ற கொச்சை நடை;
உடை களையும் புகைப் படங்கள்;
ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி!

தமிழ் நாட்டின் இளைஞர்கை
மிளிர் தலெல்லாம் ‘பேசும் படம்'
'குமுதங்’கள் இழிந்த நூல்கள்!

அமிழ்கின்ற பண்பாட்டில்
தமிழ் என்ற ஆர்ப்பரிப்பா?
போர்ப்பாட்டா? அந்தோ! வெட்கம்!

-1967



31  தமிழ் படித்தால் வாழ்வு புதுமைபெறும்!

அறம் பெருகும் தமிழ் படித்தால்;
அகத்தில் ஒளி பெருகும்!
திறம் பெருகும்; உரம் பெருகும்;
தீமைக் கெதிர் நிற்கும்
மறம் பெருகும்; ஆண்மை வரும்!
மருள் விலகிப் போகும்!
புறம் பெயரும் பொய்மை யெலாம்!
புதுமை பெறும் வாழ்வே!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/80&oldid=1513002" இலிருந்து மீள்விக்கப்பட்டது