பக்கம்:கனிச்சாறு 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  61


37  இதற்கென்ன சொல்லுகின்றீர்?

சுனிதி குமார் சட்டர்சி
எனும்வட நாட்டுப் பார்ப்பான், - சொல்லுகின்றான்;
சமற்கிருத உதவி யின்றி
இனிதியங்கா தாம், தமிழும்;
அதன் மடியில் வளர்ந்துவாம்!
- இதைக்கேட்டே இளிக்கின்றார் தெ.பொ.மீயார்!
குனிதொழிலை நன்குசெய்த பெருமை சொல்லி, சட்டர்சி
கொண்டையத்திற் கேற்றுகிறான், தெ. பொ. மீ.- யை!
இனியென்ன?
'நடப்பதும் தமிழாட்சி' - எனத்தருக்கும்
தமிழர்களே! இதற்கென்ன சொல்லுகின்றீர்?

சட்டர்சி போன்றவர்க்கும் தெ.பொ.மீ. போன்றவர்க்கும்,
சாட்டையடி போல் தந்தே,
உடன்முன் நின்று,
தட்டியடக் கின்றதிறம் படைத்தவர்கள் இங்கிலரா?
தன்மானம் உள்ளவர்கள் அற்றாபோனார்?
அட்டியிலை; இருக்கின்றார்!.
ஆனாலும், வாய்ப்பிலராய் -
ஆள்கின்றார் துணையிலராய்!
முடங்கிப் போனார்!
கெட்டதொரு வாய்ப்பிதுதான்! நமைநாமே
என்றென்றும்
கெடுத்துவந்த கதையிதுதான்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/88&oldid=1419374" இலிருந்து மீள்விக்கப்பட்டது