இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 73
43 ஆர்த்த முரசே அறை!
கூர்த்த மதியுடையார் கூடித்
தமிழகமேல்
போர்த்த பகைகடியப் பொங்கினார்
என்றே நீ
சீர்த்த அரிமாப்போல் செங்கட்
புலியேபோல்
ஆர்த்த முரசாய் அறைவாய்
தமிழ்மகனே
-1966
44 மானக்கொடி ஊன்றுக!
அடியெடுத்த ஆரியரால் ஆங்கிலரால் வடவரினால்
அருந்தமிழர் பட்ட தீங்கைப்
படியெடுத்தே அளந்தாலும்
பெருந்துலையால் நிறுத்தாலும்
பாரோர்க்குப் பங்கிட் டாலும்
துடிதுடித்த நெஞ்சளவில் துளிதீர்மோ? தமிழினத்தின்
துயர்தீர்மோ? விடிவு நேர்மோ?
இடியெடுத்த நெஞ்சத்தீர்! மறக்குலத்தீர்! தமிழ்மானம்
இலங்குகொடி ஊன்று வீரே!
-1966