பக்கம்:கனிச்சாறு 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  99


58  புறப்பட்டாய், நீ!

உரிமையெனும் மெய்க்கொள்கை
தமிழர்க்கென்றும்
உயிர்க்கொள்கை; உயிரைவிட
உயர்ந்த கொள்கை!
நரிமையினும் கீழ்மையராம்
வடவர், உன்னை
நாய்மையினும் கீழெனவே
நடத்திவிட்டார்!

எரிமொய்த்துள் இருந்ததுபோல்
இதுநாள் மட்டும்
இருந்துவிட்டாய்; உயர்மானம்
இழந்துவிட்டாய்!
கரிமையினும் கருமையுற்றாய்;
கடுகாய்த் தேய்ந்தாய்;
கனித்தமிழால் விழித்தெழுந்தாய்!
கனல்வாய் இன்றே!

புத்துணர்வு பெற்றுவிட்டாய்!
உடலுக்குள்ளே
புதுக்குருதி சுரந்ததின்று!
புறப்பட்டாய்,நீ!
பித்துணர்வால் அடிமைநலம்
பேசிவந்த
பெருவாயால் உரிமைநலம்
முழக்குகின்றாய்!

ஒத்துணர்வால் பகைப்புலத்தின்
வேரறுப்பாய்!
உட்பகையாம் பார்ப்பனர்தம்
உயிரைச் சீய்ப்பாய்!
கத்துணர்வால் பயனிலைகாண்!
களிற்றுக் கூட்டம்
கனன்றெழுந்து விட்டதினிக்
கடுகல் நன்றே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/135&oldid=1424685" இலிருந்து மீள்விக்கப்பட்டது