பக்கம்:கனிச்சாறு 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


காம ராசரின் கைகள் உயர்ந்தால்
“காம ராசரோ கருப்புக் காக்கை; 30
கருப்புக் காக்கையை இருப்புலக் கையினால்
வெருட்டுக, வெருட்டுக" என்பர், இராசாசி!

இராசாசி உள்ளம் தமிழர்க்குப் பள்ளம்!
இராசாசி நினைப்பதோ என்றைக்கும் என்னெனில்,
“இன்றோ நாளையோ எப்படி யோ,ஓர் 35
ஒன்றிப் பார்ப்பான் உயர ஏறித்
தன்கீழ்க் காலடித் தமிழரைக் கிடத்தி
முன்போல் ‘மனுநெறி' மூளவி டானோ!”
என்பதே என்க! என்றும் தமிழர்க்குத்
தின்பதே வாழ்வெனில் அதுவும் திகழ்வதே! 40
நூற்பா ஒன்றினை நினைவினிற் கொள்ளுக!
“பார்ப்பான் நண்பன் தமிழர்க்குப் பகைவன்”

ஆகவே, கலைஞர் ஆட்சியைக் காக்க!
சாகவே நேரினும் தமிழரால் சாக!
பொருட்செல்வம் மானப் பொருட்டன்று! தமிழரே,
அருட்செல்வர் ஆட்சியை அரணிட்டுக் காக்க!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/154&oldid=1424776" இலிருந்து மீள்விக்கப்பட்டது