பக்கம்:கனிச்சாறு 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  123


உரசிக் கேட்பாய்; உண்மை உணர்கிலை.
பொருளியல் அடிப்படை புகலுக என்கிறாய்!
மருளுமுன் மனத்தினை என்னென மதிப்பேன்?

தமிழகம் பிரியா திருப்பது தவறெனற்
கமிழாக் கரணியம் பத்தென அறைக!

ஒன்றே, தமிழ்மொழி உயர்நிலை கெடுமே!
இரண்டே, இந்தி என் றையும் புகுமே!

மூன்றே, சமயமும் குலமும் மூட்டிய
ஆன்ற புரட்டினை அகற்றலும் அரிதே!

நான்கே, பார்ப்பனன் நச்சுத் தன்மையால் 140
தீங்குறும் இனத்தினைத் தேற்றலும் அரிதே!

ஐந்தே, தமிழ்ப்பண் பாடகன் றொழிமே!

ஆறே, தமிழ்மொழி இலக்கிய இலக்கணம்
வேறு வேறாய் விலகி யழியுமே!

ஏழே, சமசுக் கிருதம் எழுந்து
பாழெனத் தமிழரை அடிமைப் படுத்துமே!

எட்டே, தமிழினம் இனியும் சிதறிக்
கெட்டுப் படிப்படிக் கீழ்மையுற் றழிமே!

ஒன்பதே, பொது நிலை யுடைமை நிரம்பிய
மன்பதை இங்கு மலர்த்துதல் அரிதே! 150

பத்தே, அரசியல் அதிகார நிறைவே
எத்தானும் எய்தல் இயல்வதா காதே.


இத்தகு வியலாமை என்றும் இருந்திட
ஒத்ததுன் உளமெனில் ஒற்றுமை பேசலாம்!
இத்தளை நீக்கி எதிர்காலத்துப்
புத்துணர் வெய்திடும் புதுக்குமு காயம்,

தோற்றிட வேண்டும் என்பையோல் அரசினை
மாற்றிட வேண்டும்! இந்நிலை மறுத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/159&oldid=1424781" இலிருந்து மீள்விக்கப்பட்டது