பக்கம்:கனிச்சாறு 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  137

கொண்ட வடவரின்பால்
கண்ட பயன் அடிமை - யல்லால்,
உரைப்பது வோ - சொல்லால்?
மென்றோம் பல்லால்! - இனி
பண்டைப் பெருமைநிலை
உண்டே உரிமைபெற - வாரீர்!
ஒன்று - சேரீர்!
- விடுதலையைச்..... (சொன்னால்)

-1973


81  தமிழிளைஞர் வீறுகொள்க!

இற்றைநாள் தமிழிளைஞர் எழில் புனைந்து
குறுந் துணியை இறுக்க மாட்டிக்
கற்றைமுடி பின்தொங்கப் பாவையர்போல்
கடைசுற்றக் காணும் போது
மற்றைநலம் நினைக்கின்ற நினைவெழுமோ?
மறவுணர்வு மதர்ந்து தோன்ற
அற்றைநாள் நலன்மீட்கும் ஆர்வமெல்லாம்
அலைந்தெழுமோ? அழிந்தி டாதோ?

பழியாகும் பாழ்வழியை நம்மிளைஞர்
உடன் விடுத்துப் பதைப தைத்து,
மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும்
பொருளாலும் பண்பாட் டாலும்
விழியாமற் கிடக்கின்ற தமிழினத்தை
விடுவிக்க வீறு கொண்டால்,
பொழியாதோ பொதுமைமழை; பூக்காதோ
புதுமைநலம்; பூட்கை யோர்க்கே!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/173&oldid=1416771" இலிருந்து மீள்விக்கப்பட்டது