இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
104
என்ன செய்குவது? இவர்களைத் தேர்விரே!
என்னருந் தலைவர்கள் இதுவரை மேடையில்
சொன்ன சொற்களில் சோர்வுகள் தோன்றின;
அன்னவர் செயல்களில் அயர்வுகள் தெரிந்தன;
முன்னம் ஈங்கவர் ஆண்ட முறைகளில்
இன்னல் இழிவுகள் எனப்பல விளங்கின;
பின்னரும் இவர்கள் அப் பிழைகளே செய்யலாம்!
என்னினும் தமிழரே, எதிர்வருந் தேர்தலில்
என்ன செய்குவ திவர்களைத் தேர்விரே!
இன்றைய நாளினில் அரசியல் என்ப(து),ஓர்
ஒன்றித் தனியனின் உழைப்பினில் நடக்குமோ?
அன்றியும் தேர்தலில் அனைவரை வீழ்த்தியே
வென்றி பெறுவதும் சூழ்ச்சியின் றாகுமோ?
நன்றி கொன்றவர், நடுநிலை பிறழ்ந்தவர்,
என்றும் இருந்திடும் பழியினர், ஆயினும்
ஒன்றுகூறுவேன் தமிழ்நல உண்மையால்
தென்றமிழ்த் திரவிடர் தேர்ந்து கொள்வீரே!
-1979