பக்கம்:கனிச்சாறு 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


115

பற்றி எரியட்டும் தீ!


எடுப்பு


பற்றி எரியட்டும் தீ - கொடும்
பார்ப்பனர் நஞ்சைப் பரப்பிய நூல்களில்
பற்றி எரியட்டும் தீ!

தொடுப்பு


சுற்றி எரியட்டும்! சூழ்ந்தே எரியட்டும்!
சூழ்ச்சிகள் வஞ்சங்கள் தாழ்ச்சியின் நூல்களில் (பற்றி)

முடிப்பு


மக்களை வேறு பிரித்தனவாம், அவை
மடமை வளர்த்தனவாம் - ஒரு
திக்குத் தெரியாமல் மூடமுட் காட்டிலே
திரிய வைத்தனவாம் அதனால் (பற்றி)

சிந்தனை கொன்றன வாம்;உயர் வாழ்வினைச்
சீர ழித்தனவாம் - ஒரு
மந்த நினைவினை மயக்க உணர்வினை
மனத்தில் வளர்த்தன வாம்! - அதனால் (பற்றி)

மெய்ம்மையைத் தின்றன வாம்;நல்ல வாழ்க்கையின்
மேன்மை யழித்தனவாம்! - பெரும்
பொய்மை பரப்பின வாம்; தமிழ் மக்களின்
பூண்டை அறுத்தனவாம்! - அதனால் (பற்றி)

பண்பை உறிஞ்சின வாம்;நமை யே, இழி
பள்ளத்தில் தள்ளினவாம் - நறுந்
தண்புகழ் சேரும் இலக்கிய நூல்களைத்
தாவி யழித்தனவாம்! - அதனால், (பற்றி)

ஆட்சியைச் சாய்த்தன வாம்;தமி ழர்களின்
ஆளுமை போக்கினவாம் - மொழி
மாட்சியை நீக்கி வடமொழி ஊக்கி, நம்
மானத்தை வாங்கினவாம்! - அதனால், (பற்றி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/212&oldid=1437589" இலிருந்து மீள்விக்கப்பட்டது