பக்கம்:கனிச்சாறு 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


116

செந்தமிழர் இறுதிநிலை!


செந்தமிழை எண்ணிச் செயற்படுக!
செந்தமிழர்
வந்தவர லாறெண்ணி வந்திணைக!
வந்தவர்கள்
சொந்தநலம் தாம்துறக்க! சோர்வின்றிச்
சூழ்ந்தியங்கி
நொந்தநிலை நீக்கிடுக, நோன்று!

நாட்டுநிலை சிந்திக்க! நந்தமிழ்க்கு
வந்துற்ற
கேட்டுநிலை போக்கக் கிளர்ந்தெழுக!
கேண்மையினால்
ஏட்டுநிலை பேச்சு நிலை எல்லாம்
துலக்கிடுக!
வேட்டுநிலை வேண்டெனினும் வேட்டு!

ஈதுகாண் செந்தமிழர்க் கேய்ந்த
இறுதி நிலை!
தீதுகாண் பின்னைத் தேறோமேல்!
தேறுவமேல்
சூதுகாண் நீங்கும்! சொந்தநில
வாழ்வெஞ்சும்!
ஏதுகாண் மற்றிங் கினம்!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/214&oldid=1437592" இலிருந்து மீள்விக்கப்பட்டது