இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
190 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
123
கொடும் வறட்சி உற்றதுவோ
நல்லறிவு செயற்கே!
உளந்திரிந்து சொல்திரிந்து
செயல்திரிந்து போன
உலுத்தரிடை மொழிநலமும்
இனநலமும் கூறி
வளந்தெரிந்து பொதுநலத்தைப்
புதுக்கிடுவீர் என்றால்
வருகின்ற அன்பரெலாம்
முகந்தெரிந்து சொல்வார்!
களந்தெரிந்து முனைந்தாலும்
கடுகுவிளை வில்லை!
காதுபட உரைத்தாலும்
செவிதருவார் இல்லை!
குளந்திரிந்து நீர்வற்றிப்
போனதுபோல் நாட்டில்
கொடும்வறட்சி யுற்றதுவோ
நல்லறிவு செயற்கே!
-1983