128 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
130
இவர்க்கிடையில் வரும்விளைவு
தழைப்ப தென்றோ?
தமிழினத்தின் ஒருசாரர் பார்ப்பனர்க்கும் வடவர்க்கும்
தமையடகு வைக்கும்தன் மான மற்றோர்;
தமிழினத்தின் னொருசாரர் தமிழரையே அரசியலால்
சுரண்டியுண்ணும் தாய்க்கொலைஞர்; மற்றோர் சாரார்,
தமிழினத்தில் தாம்பிறந்தும் தமிழரையே எதிர்க்கும், இனப்
பற்றில்லா உட்பகைவர்; பிறிதோர் சாரார்,
தமிழினத்தின் முன்னேற்றம் கருதுவரைத் தந்நலத்தால்
புறங்குத்திக் கட்டழிக்கும் தாழ்மை யோரே!
தமிழினத்தின் தாழ்ச்சியினை - வரலாற்றின் வீழ்ச்சியினை -
அவைமீட்கும் மீட்சியினை - எண்ணி டாமல்,
தமிழினத்தின் அறியாமை, மெலிவுள்ளம் - எனுமிவற்றைக்
காசாக்கும் கலைக்கயவர் - இன்னோர் சாரார்!
தமிழினத்தை உள்ளரித்தே உயிர்ப்பழிக்கும் மதக்கேடர்,
சாதிவெறி கொண்டவர்கள் வேறோர் சாரார்!
தமிழினத்தை மீட்டெடுக்கும் உறுதியினார்க் குரமழிக்கும்
இவர்க்கிடையில் வரும்விளைவு தழைப்ப தென்றோ?