பக்கம்:கனிச்சாறு 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  201


131

அரசியலைச் சாராமல்
இனவியலால் ஒன்றுபடுக!


அரசியலைச் சாராமல் இனவியலை முன்வைத்தே
அனைவரையும் ஒன்று சேர்க்க
முரசறையும் தமிழ்த்தலைவன் ஒருவன்தான் தமிழினத்தை
முழுஅளவில் இணைத்தல் கூடும்!
உரசுதலும் உரப்புதலும் ஒருவரைமற் றொருவரிங்கே
ஒளிப்பதுவும் ஒழிப்ப தும்மே
வரிசலுறச் செயும், இனத்தை! வேண்டாமிக் கூன்கொள்கை!
வெற்றிபெற விரைந்து வாரீர்!

மொழியின்றி இனமில்லை; இனமின்றி அரசியலும்
முகிழ்த்தெழுதல் இல்லை, இங்கே!
வழியின்றித் திட்டங்கள் வகுக்கின்றீர் வாயுரையால்
வல்லமையைக் காட்டு கின்றீர்!
விழியின்றி ஒருகுருடன் நடப்பதுபோல் தடுமாறி
விழுந்துவிழுந் தெழுந்து செல்வீர்!
சுழியின்றிச் சூழ்ச்சியின்றித் தமிழினத்தை ஒருங்கிணைக்கச்
சோர்வின்றி எழுக இன்றே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/237&oldid=1437438" இலிருந்து மீள்விக்கப்பட்டது