இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
அஞ்சாதீர் அஞ்சாதீர் தோழர்களே - நம்மை
யாள நினைப்பவர் தாமொரு நாள்
பஞ்சாகித் தூளாகிப் போவதுண்டு - நம்மின்
பாதந் தொழுவது உண்டெனவே!
(உள்ளங்)
-1953
7 ஆர்த்திங்கு வம்மினோ!
வம்மின் தமிழ்ப்புலவீர்!
மாணவரீர்! வல்லுணர்வீர்!
அம்மையீர்! ஆடவரீர்!
ஆர்த்திங்கு வம்மினோ!
செம்மைசேர் வாழ்வைத்,
துலங்கு மணிச்சுடரை,
நம்மை வளர்த்த
நறுஞ்செவிலித் தாய்மணியை,
மம்மர் அறுக்குமொரு
மாமருந்தைச், செந்தமிழ்த்தாய்
தம்மை, வளர்த்துத்
தழையவழி செய்வோமால்!
மும்முறையுஞ் சூளுரைத்தோம்;
மூச்சறுக்க நாந் துணிந்தோம்;
எம்மையருந் தொண்டிற்
கெருவென்றோம்” என்பீரே!