பக்கம்:கனிச்சாறு 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி



10  உய்வோம் வாரீர்!

தமிழ்நாட்டைத் தமிழ்நா டென்னத் தமிழரில்
மறுப்பார் தம்மீ
துமிழுங்கள் காறி! அன்ன உலுத்தரை
உடனே மாய்ப்பீர்!
தமிழ்மக்கள் குடலை உண்டு தமிழர்க்கே
தீங்கு செய்யும்
தமிழனைத் தமிழன் என்று தவறியும்
கூறா தீர்கள். 1

தென்னாட்டுப் பணத்தைத் தூக்கித் தில்லியார்க்
கனுப்பி விட்டே,
பின்னாட்டம் போடு வாரைப் 'பேடி'யென்
றுரைப்பீர்! இன்னும்
சின்னாட்கள் கழித்தன் னாரின் சீட்டினைக்
கிழிப்பீர்! ஆகி
நன்னாட்டைக் காப்பீர்; காத்து நந்தமிழ்
அரசுண் டாக்கீர்! 2

நாட்டினைப் பிரித்தல் தீதென் றியம்புவார்,
தெலுங்கு பேசும்
நாட்டினிற் குரிமை தந்த மென்?
நாமெல் லோரும்
கூட்டமிட் டுரைப்ப தென்ன என்பதற்
கெவரும் காணோம்!
ஏட்டினில் எழுதித் தீர்த்தோம்; ஏனென்று
கேட்பார் இல்லை! 3

இந்தியைக் கற்கக் கட்டுப் பாடில்லை
என்றார்; ஆனால்
இந்தியைப் புகுத்து தற்கே இருந்தநா
ணயத்தை மாற்ற,
'மந்திரி' என்பா ரெல்லாம் மடம்பேசி
நிற்பார்; அன்னார்
தொந்தியை வளர்ப்ப தற்குத் தமிழினை
அடகு வைத்தார்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/50&oldid=1523584" இலிருந்து மீள்விக்கப்பட்டது