பக்கம்:கனிச்சாறு 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  15

கடந்துள்ள ஆண்டி லெல்லாம் கணக்கிட்டால்
தமிழ்நாட் டார்க்கு,
நடந்துள்ள கொடுமை மிஞ்சும்! நரிகளின்
அமைச்சால், நாட்டில்
படர்ந்துள்ள தீமை, எண்ணப் படுதற்கொன்
னாதே! இன்னும்
தொடர்ந்துள்ள திட்ட மெல்லாம் உமிமூட்டை;
எவ்வா றுய்வோம்? 5

தனியர சேற்போம்! அன்றித் தமிழராய்ப்
பொருது மாள்வோம்!
இனியர சாளு வோர்கள் ஏய்த்திடு
வார்கள்! நாமும்
முனியாது நின்றால் மாற்றார் மிதிபட்டே
இறந்து போவோம்;
'குனிதொழில் வேண்டாம்' என்ற கொள்கையில்
உய்வோம் வாரீர்! 6

-1956
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/51&oldid=1523585" இலிருந்து மீள்விக்கப்பட்டது