இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 15
கடந்துள்ள ஆண்டி லெல்லாம் கணக்கிட்டால்
தமிழ்நாட் டார்க்கு,
நடந்துள்ள கொடுமை மிஞ்சும்! நரிகளின்
அமைச்சால், நாட்டில்
படர்ந்துள்ள தீமை, எண்ணப் படுதற்கொன்
னாதே! இன்னும்
தொடர்ந்துள்ள திட்ட மெல்லாம் உமிமூட்டை;
எவ்வா றுய்வோம்?
5
தனியர சேற்போம்! அன்றித் தமிழராய்ப்
பொருது மாள்வோம்!
இனியர சாளு வோர்கள் ஏய்த்திடு
வார்கள்! நாமும்
முனியாது நின்றால் மாற்றார் மிதிபட்டே
இறந்து போவோம்;
'குனிதொழில் வேண்டாம்' என்ற கொள்கையில்
உய்வோம் வாரீர்!
6
-1956