பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 33
இயல்பழிந் திழிசெயல் விளைத்தமூ வேந்தரின்
இழிவதோ? மறமதோ? நீங்கிலா
மயல்நினை வுளங்கொள மணித்தமிழ்ப் புலவரை
மதித்திடா வினையிதோ? பாங்கிலாச்
செயலுறத் துணிந்தவர் முறைகெட நடத்திடச்
சினந்தநற் றுறவியர் தாங்கலோ?
அயல்நில வரசரின் துயர்பொறா வுரைகளோ?
அழிநிலைக் கடியென ஏங்குவேன்!
9
சமையுறாச் சமயநேர் மையறுஞ் செயலினால்
சமணரின் மனங்கொதி வுரைகளோ?
இமையவெண் பொருவரை எதிர்ந்தவர் கடந்துகல்
எடுத்துளங் கடுத்தவர் முறைகளோ?
அமைவுரு உளத்தினால் அடுத்தவர் தலைகளை
அடியுறக் களிறிடர் கறைகளோ?
எமையுமிந் நிலத்தையும் இழிபடச் செயுவினை
இவைகொலோ? எனவுளங் கரைகுவேன்!
10
2 அடிமை வாழ்வு எத்தனை நாள் ?
இமைமூடி உறங்குகின்ற விழிமலர்க!
இளைஞர்தம் உணர்வெழுக! எழுக தோள்கள்!
சுமை சுமையாய் அற்றைநாள் சுமந்த புகழ்
நினைத்திடுக! சூடேற்றிக் கொள்க நெஞ்சு!
நமையழிக்க இற்றைநாள் வரும்பகையை
எண்ணிடுக! செந்தமிழ்த்தாய் நலம்போ மாயின்
அமைகின்ற அடிமைவாழ் வெத்தனைநாள்?
ஆர்த்திடுக, தமிழுரிமை காத்தற் கென்றே!