இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 37
தத்தளிக்கும் தமிழ்நெஞ்சே! அயர்வகற்று;
தனித்தமிழ்க்குத் தாழ்விங் கில்லை;
முத்தளிக்கும் முழங்குகடல் முப்புறமும்!
முகில்மட்டுங் குன்றும் காவும்!
செத்தழியும் உளத்தினுக்குஞ் செழிப்பளிக்கும்
சிறப்பழியா இலக்கி யங்கள்!
பித்தளிக்கும் தமிழ்நறவு; பிழைப்பளிக்கும்!
பெற்றியெலாம் பிளிற்று வாயே!
9
தேம்புகின்ற தமிழ்நெஞ்சே! தெளிவடைக!
சீர்பரந்த தமிழ்ம னத்தில்
கூம்புகின்ற மொழிப்பற்றில் ஒளிகாட்டிக்
குறைமதியால், அயலார் தம்மால்
சாம்புகின்ற இனப்பற்றைத் தமிழ்நீரால்
சலித்தெடுத்தே ஒளிரக் காட்டி,
ஓம்புகின்ற அறவாழ்க்கை உயர்வுபெற
உழைத்துழைத்தே உவப்பாய் நீயே!
10
-1963