இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
தாய்மொழியைப் பேணார் தரைமூடிப் போதற்கே,
வாய்மொழியைக் காவாதார் வாழ்விழந்து போதற்கே-
120
உன்றன் பிணமே உறுகரியாம்! வல்சான்றாம்!
குன்றுபோல் வீழ்ந்திருக்கும்
கொல்களிறே! நாணுடைத்தே!
-1964
37 கவல் கொள்ளாரே !
வெட்டுகின்ற வெட்டொன்றாய்த் துண்டிரண்டாய்
மெய்க்கருத்தை விளங்கப் பேசி
முட்டுகின்ற இடர்மலைக்கும் மூள்கின்ற
பெருஞ்சுழற்கும் துணிந்தார், மூடர்
கட்டுகின்ற பொய்யுரைக்கும் அவிழ்க்கின்ற
புளுகுரைக்கும் கயவர் பாங்கில்
கொட்டுகின்ற வாய்ப்பறைக்கும் செவிகொடுத்தார்;
விடையிறுக்கார்; கவல்கொள் ளாரே!
-1965