பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 63
ஏயும் பொருள் கணக் கிட்டெழு நூறு
முறைநினைப்பார்;
ஆயும் பொருளும் முடிவுந் தெரிகிலார்;
ஆய்ந்தவர்க்கொன்
றீயும் நிலைவரின் காசொன்றும் ஈகிலார்;
ஈந்தவற்றை
மாயும் பொழுதினும் தாம்நினை வூட்டி
மகிழுவரே!
5
பற்றொன் றிலர்போல் பலபடப் பேசுவர்;
பாழ்ம்பொருட்கே
எற்றென் ரிராப்பகல் எண்ணிப் புலம்புவர்;
ஏதிலர்பால்
கற்றொன் றறிந்தவர் போலுரை யாற்றிக்
களிப்புறுவர்!
நெற்றொன் றிடைமறைந் துண்மை கரக்குமோ
நெற்பதரே!
6
'கட்டுடை பாரோம்; களிபொருள் தேரோம்'
எனவுரைப்பார்;
வட்டுடை யோர்முழம் சாலுமென் பார்;தனி
வாய்த்திடிலோ
பட்டுடை யென்னினும் கட்டிக் களிப்பார்;
படுந்துயர்க்கே
நெட்டுயிர்ப் போடுவர்; ஈகமென்
றஃதை நிகழ்த்துவரே!
7
படைத்திடு சொல்வினை யாவினும் முந்திப்
பணிதொடங்கின்
டைத்துணி போல இடையிடை யேநெகிழ்
வார்; உரையால்
மிடைத்தருள் சாற்றி அணைக்கினும் மேன்மேல்
மிடிதருவார்;
கடைத்தவர் செய்கை; இனையரால் என்றுங்
கழியிடும்பே!
8