பக்கம்:கனிச்சாறு 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


இலங்கையில் பிசியில் மற்றும்
எந்நாட்டும் தமிழர் வாழ்ந்து
கலங்கையில், தமிழர் நாட்டின்
கருப்பையின் குழந்தை நெஞ்சும்
மலங்கியுள் துடித்தல் வேண்டும்!
மாண்புயிர் வேதல் வேண்டும்!
நலங்குலைந் திழிவு பட்ட
தமிழா,அந் நாளும் உண்டோ? 21

அயல்நிலந் தாவிப் போந்தீர்!
அடிமையாய் வாழ்த லுற்றீர்!
மயலுறும் கொடிய ராட்சி
மலையினால் மோத லுற்றீர்!
வயலுண்டு; வளமு முண்டு!
வாழ்தமி ழகத்தில்; ஆனால்
செயலுண்டோ, உரிமை யுண்டோ,
உங்களைச் சீந்து தற்கே? 22

குலைகுலை யாகப் பூத்த
குலமே, செந் தமிழ்ப்பூக் காடே!
விலையிலை உன்மொழிக்கே;
விளைவுக்கும் வரலா றில்லை!
அலையலை யாகப் போனாய்
அயல் நிலந் தேடி! அங்கே
இலையிலை யாக வீழ்ந்தாய்!
இருப்பது கிளையொன் றேயாம்! 23

அடிமரம் தமிழ்நி லந்தான்!
ஆனாலும் மரத்தின் வேரில்
குடி கொளும் ஆரி யந்தான்
கொடுநாகம்! அந்நா கத்தின்
முடிமயல் கொள்ளு மாறு
மகுடிவைத் தூதும் ஆட்சி!
விடியுங்கொல், இருளுங் கொல்லோ,
விறல் தமிழ் மரத்தின் வாழ்க்கை? 24

விடுதலை ஒன்றே வாழ்க்கையை
விடிவுறச் செய்யும்! மாற்றார்
கெடுதலைத் தூள்தூ ளாக்கும்!
கீழ்மையைத் தலைகீ ழாக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/107&oldid=1424598" இலிருந்து மீள்விக்கப்பட்டது