பக்கம்:கனிச்சாறு 3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  85


78 
கன்னித் தமிழ்நிலம் உணருமா? - புதுக்
கதை தரும் உரிமைகள் மலருமா?


தமிழ்மொழி காக்கவும்
தமிழினம் மீட்கவும்
தமிழ்ப்படை அங்கே எழுந்தது! - நெடுந்
தமிழ்ப்பகை உடனே விழுந்தது!
குமிழ்த்தெழும் குருதி!
குன்றுதோள் உறுதி!
கொள்கைத் தமிழர்கள் கூடினர்! - ஒரு
குரலினால் விடுதலை பாடினர்!

தெற்குச் சிவந்தது!
தீந்தமிழ் நிவந்தது!
செந்தமிழ் ஈழம் மலர்ந்தது! - கொடுஞ்
சிங்களப் பெரும்பகை உலர்ந்தது!
கற்குன் றென,ஒரு
காட்சியும் பிறந்தது!
கன்னித் தமிழ்நிலம் உணருமா? - புதுக்
கதைதரும் உரிமைகள் மலருமா?

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/114&oldid=1424606" இலிருந்து மீள்விக்கப்பட்டது