இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 107
96 யாருக்காக அழுகிறாய்?
யாருக்காக அழுகிறாய் மகளே!-நீ
யாருக்காக அழுகிறாய் மகளே!
ஊருக்கா அழுகிறாயா? -இல்லை,
உனக்காக அழுகிறாயா?
(யாருக்காக)
நேருக்கு நேராகவே
நின்று சுடும் கொலைஞர்களைப்
பேருக்கு அமைதிப்படை
எனும் பெயரால் அனுப்பினரோ?
(யாருக்காக)
வேருக்குள் வெந்நீர்விட்டே
விளையும் என்றே கொன்னாரோ?
நீருக்குள் நஞ்சை ஊற்றி
நீயருந்தத் தந்தாரோ?
(யாருக்காக)
பெற்றவரைக் கொன்றாரோ?
பிணங்களின்மேல் குவித்தாரோ?
கற்றநிலை குலைந்ததுவோ?
கஞ்சிக்கும் வழியிலையோ?
(யாருக்காக)
-1988