இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 117
102 மானங் கெட்டதுகளும்! மதி கெட்டதுகளும்!
மானங்கெட்ட நெடுஞ்செழியன்,
மதிகெட்ட வீரப்பன், இராசா ராமன்,
தானுங்கெட்ட தல்லாமல்
தமிழரையும் கெடுக்கின்ற சோம சுந்தரன்
ஏனிங்கே இறவாமல்
இன்னுமிருக் கின்றாரென் றெண்ணு மாறாய்
ஊனுடலில் உயிர்க்கின்ற
உருவங்க ளேயிவரென் றெண்ணு வீரே!
ஈழப்பு லிகளேசெய்
தாரென்னும் பேரெத்தன், பிறந்த ஊராம்
வாழப்பா டி, என்னும்
பெயர் கெடுக்க வந்துநிற்கும் இராம மூர்த்தி,
தாழப்போ கின்றசெய
லலிதாவெ னும்தளுக்குக் காரி யெல்லாம்
வீழப்போ கின்ற செய்தி
விரைவாகக் கேட்கும்தமிழ் நாடு மிங்கே!
-1991