பக்கம்:கனிச்சாறு 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


11  தமிழ் நிலத்தை விடுவிப்பீர்!


இருசகன்ற வண்டியினிற் கண்ணவிந்த
ஏறுகளைப் பூட்டி, மக்கள்
நெரிசலுறுங் குறுந்தெருவில் பெருங்குடியன்
வெருட்டுதல்போல், அமைச்சர் என்பார்
அரசியலை நடத்துகின்றார் அவர்மனம்போல்!
மிகக்கொடுமை! அழன்றெ ழுந்தே
முரசறைவீர்! தமிழ்வழங்கும் முழுநிலத்தை
விடுவிப்பீர்! முனைவீர் இன்றே!

-1964



12  குரங்கர் ஆட்சி!

உரியன செய்யார்; சான்றோர்
உரையுளங் கொள்ளார்; தீய்ந்த
கரிய வன் னெஞ்சர்; முற்றாக்
கனவினிற் காரு வாவில்
நரியை நாய் புணர்ந்து பெற்ற
குரங்கு கள் ளுண்டாற் போலத்
திரியுநர்; உரைப்பர்; மக்கள்
திகைப்புற நாடாள் வோரே!

-1965
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/41&oldid=1424534" இலிருந்து மீள்விக்கப்பட்டது