பக்கம்:கனிச்சாறு 3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  19


18  பகை விலகாதோ!

உள்ளத் துரமும் உரையில் துணிவும்
உரைத்தபடி
வெள்ளத் தனைய துயர்மேல் வரினும்
வினை செயலும்
கொள்ளத் தகுந்த விடுதலை எண்ணமும்
கொண்டுவிட்டால்
எள்ளத் தகுந்த பகைவில காதோ
இளைஞர்களே!

-1966



19  நாடு நலம்பெறுதல் குதிரைக்கொம்பே!

ஏடாயி ரங்கோடி எழுதிக் குவித்தாலும்,
இடித்திடித்து உரைத்திட் டாலும்,
பூடாயி ரங்கோடி பிழிந்து, மருந் திட்டாலும்,
புத்தறிவு புகட்டி னாலும்,
கேடாயி ரங்கோடி கிளர்க்கின்ற செய்தித்தாள்,
கீழ்மைத் திரைப்படங்க ளாலே,
நாடாயி ரங்கோடி ஆண்டுகள் சென்றாலும்
நலம்பெறுதல் குதிரைக் கொம்பே!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/48&oldid=1424539" இலிருந்து மீள்விக்கப்பட்டது