பக்கம்:கனிச்சாறு 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  21


22  புரட்சி நாள்.....!!

பட்டினியால் ஒருபுறத்தே மக்கள்படும்
பாடறிந்தும் பதறார் உள்ளம்!
சுட்டிறப்பார் எண்ணிக்கை வளர்வதல்லால்
நாட்டுவளம் வளர்தல் காணோம்;
எட்டுணையும் உரிமையில்லை; வாழ்க்கையில்லை;
ஏழ்மையின்னும் ஒழிய வில்லை;
கிட்டியதோ பெரும்புரட்சி இந்நாட்டில்
கிளர்ந்தெழுமோர் நல்ல நாளே!

-1967


23  ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை....!

ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை, உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை,
எற்றைக்கும், எந்நிலத்தும், எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்; மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம்; பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று!

-1968


24  சாகின்ற செந்தமிழீர்.....!

சாகின்ற செந்தமிழீர் சாகா விடுதலைக்கே
போகின்ற தெண்ணிப் புறப்படுங்கள் - மாகுன்றத்
தோளும் மணிமார்பும் தூங்காத நல்லுணர்வும்
நாளும் துணையாம் நமக்கு!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/50&oldid=1424541" இலிருந்து மீள்விக்கப்பட்டது