இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36 ☐ கனிச்சாறு - மூன்றாம் தொகுதி
காவலர் ஒருபுறம் கையற நடந்தனர்;
காளையர் நிரல்படக் கொடியோடு கடுகினர்!
மேவுறு கன்னியர் சிறுவர்கள் ஒருபுறம்
மெல்லிய செந்நிற மார்பணி பூண்டராய்
ஆவலின் கொள்கைகள் அழகுற முழக்கினர்!
அயில்விழித் தாயினர் அவர்வழித் தொடர்ந்தனர்!
கூவலோ பகைவரின் குலைகளை உலுக்கின!
கொள்கைகள் அவர்செவிக் குறும்பறை யறுத்தன!
குன்றுகண் டஞ்சிடுந் தோளினர் எம்மவர்!
கூற்றினை நூறிடுங் கொல்களி றன்னவர்!
‘வென்றுகொண் டவர்தலை வெட்டிவா'என்றிடில்
வீணரைக் கட்டிவந் தவிழ்த்திடும் வேங்கையர்!
மென்று கொண் டிருந்தவெம் படையினர் தோள்களில்
மேல்விழுந் தாடியே களித்தது வீரமே!
அன்றுகண் டாரியப் படைகடந் தவனினும்
அழல்தெறி மறவரைக் கண்டது மதுரையே!
-1973