பக்கம்:கனிச்சாறு 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 53


52  மீட்போம் தமிழ்நாடு!


அன்புத்தமிழ்த் தாய்மொழியை
அழிவடவர் சீர்குலைக்க
முன்பிருந்தே இந்திபுக
விட்டார்! - உளத்
தென்புடனே நாமெழுந்தால்
கெட்டார்!

பண்டைத்தமிழ்த் தாயினத்தைப்
பார்ப்பும் சேர்ப்பும் அடிப்படுத்தும்!
அண்டை அயல் நாடுகள் பார்,
தம்பி! - வெறுங்
கொண்டைகளா நாம்? எழுக
நம்பி!
நல்லதமிழ்த் தாய்நிலத்தை
நாயும்பேயும் ஆட்சி செய்யும்!
வெல்லுதற்கே நாம்முனைதல்
வேண்டும்! - வேறு
சொல்லுதற்கே யாதுளது,
மீண்டும்?

காலம்,இடம் தேர்ந்துவிட்டோம்;
களத்திறங்க எண்ணிவிட்டோம்!
கோலங்கொள்வாய் வீறுறுதி
யோடு! - வெற்றி
ஓலமிடு! மீட்போம், தமிழ்
நாடு!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/82&oldid=1424573" இலிருந்து மீள்விக்கப்பட்டது