இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62 ☐ கனிச்சாறு - மூன்றாம் தொகுதி
வதமிழ் நாட்டைப் பெறாமல்
தமிழர் வாழ்வில்லையே !
தமிழர் வாழ்வில்லையே !
இந்தியத் தேசியம் என்பது பொய்மை!
இந்திய ஒருமையென் றெண்ணுதல் அடிமை!
இந்தி(ய) மொழியென் றியம்புதல் கீழ்மை!
'இந்தியா' தமிழருக் குதவாத கொள்கை!
பார்ப்பனர், வடவர், வணிகரே, இந்தியர்!
பார்ப்பனர் ஆட்சி பயன்படா தெமக்கே!
ஊர்ப்பணக் கொள்ளையர் ஒருமைப்பா டென்பர்!
ஒருநாள் அவையெலாம் அடங்குவ துறுதியே!
தமிழரெ லாம்தமைத் தமிழரென் றெண்ணுக!
தம்சாதி மறக்க; தமிழினம் நினைக்க!
தமிழரெ லாம்தமின் தாய்மொழி பேணுக!
தமிழ்மொழி பேசுக; பிறமொழி தவிர்க்கவே!
தமிழரெ லாம்தமின் தாய்நாட்டைக் கருதுக!
தமிழ்நாட்டை விரும்புக; தனிநாடாய் ஆக்குக!
தமிழர்க்குத் தமிழ்நாடு தம்நாடாய் ஆகுக!
தமிழ்நாட்டைப் பெறாமல் தமிழர்வாழ் வில்லையே!
-1988