பக்கம்:கனிச்சாறு 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 65


65 வாய்வீரம் பேசுகிறாய்! துயரில் பின்வாங்குகிறாய்!


உறங்கிக் கிடக்கின்ற
உணர்விலாத் தமிழனே!
இறங்கிப் போரிடாமல்
எதுவும் கிடைக்காது!
அறங்கெட்டுப் போனதிங்கே அரசு - ஆட்சித்
திறங்கெட்டுப் போனதென்று
தெளிவாய்த் தெரிந்த பின்னும்... (உறங்கிக்)

மறங்கொண்டு போரிட்டால்
விளையும் எதிர்ப்புகளை
மனங்கொண்டே ஏற்காமல்
அஞ்சி மடங்குவதா?
முறங்கொண்டு புலியெதிர்த்த வீரம் - இன்று
தரங்கெட்டுப் போவதுவோ?
தமிழகத்தை மீட்காமல்.... (உறங்கிக்)

வாய்வீரம் பேசுகிறாய்
துயரில்பின் வாங்குகிறாய்!
தாய்நாட்டைப் பார்க்காமல்
தன்னலத்தைப் பார்க்கின்றாய்!
நாயும்தன் உரிமைக்குப் பாடுபடும் - அங்கே
மாயும் தமிழர்களைப் பார்!
மற்றென்ன உன் கடமை?... (உறங்கிக்)

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/94&oldid=1424587" இலிருந்து மீள்விக்கப்பட்டது