பக்கம்:கனிச்சாறு 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


66  மண்ணுரிமை மீட்பதென்றோ ?


தெங்கிளநீர்க் குலையினிலே
தேரைநோய் பாய்ந்ததைப்போல்
தென்தமிழ இனத்தில் வந்தே,
தங்கியவேற் றினத்தவர்க்குத்
தாள் பிடித்துக் கைக்கட்டித்
தம்வயிறு வளர்க்கும் போது,
மங்கிவரும் தமிழ்மொழியைத்
தமிழினத்தைத் தமிழ் நிலத்தைத்
தமிழ்ப் பண்பைத் தமிழர் கலையை
எங்கிவர்கள் முன்னேற்றி
வளர்த்தெடுத்தே இவ்வுலகில்
ஏற்றதோர் இடத்தைக் காண்பார்?

வடமொழிக்கே உழைத்துழைத்து
வயிறுவளர்ப் பார்சிலபேர்!
வடநாட்டார்க் குழைப்பர் சிலபேர்!
படமொழியில் கதையெழுதிப்
பாட்டெழுதிச் சீர்குலைவைப்
பரப்பிவாழ் வார்கள் சிலபேர்!
திடமுடைய கொள்கையில்லை;
தென்பில்லை; இனத்துக்கொரு
தீங்குவந்தால் எதிர்ப்பதில்லை!
மடமனத்தர், மானமிலர்,
இக்காலத் தமிழரிவர்!
மண்ணுரிமை மீட்ப தென்றோ?

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/95&oldid=1424589" இலிருந்து மீள்விக்கப்பட்டது