இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 69
உன்னோ டித்தனை ஆண்டிருந்த
ஒருத்தியை நீயும் நம்பாமல்,
என்ன வகையும் நீயறியா
திருந்தான் இவன்மேல் நம்பிக்கை
என்ன முறையால் கொண்டாய்,நீ”
என்றே கேட்டேன்; வாயடங்கி
என்னைப் பார்த்தான்; நடந்தேன்,நான்!
இருந்தவர் தாமும் கலைந்தனரே!
13
-1976
46
மதப்பற்று!
அன்பர்கள் இருவர் ஓர்நாள்
அதிகாலை, வயற்பு றத்தில்,
இன்பமாய்ப் பேசிக் கொண்டே,
எதிரெதிர் சிறிது தள்ளி,
வன்புதர் அருக மர்ந்தே
வன்கடன் கழிக்க லுற்றார்!
பின்பவர் பேச்சில் தெய்வப்
பேச்செழ லாயிற் றங்கே!
1
இருவரில் ஒருவர் ‘சைவர்’!
எதிர்ந்தவர் திருமால் அன்பர்!
திருமாலின் பத்தர் சொன்னார்;
‘திருப்பதி போக வேண்டும்;
பெருமாளுக் கிறுக்க வேண்டிக்
கொண்டதைச் செய்ய வேண்டும்;
ஒருமாதம் இரண்டு மூன்றாய்
ஓராண்டு சென்ற” தென்றே!
2