இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98 ☐ கனிச்சாறு - நான்காம் தொகுதி
67
மக்களை உருவால் மயங்காதே !
நன்னிலை உணர்வுகள்
நசிந்தன தம்பி!
நலிவைக் கண்டே அஞ்சாதே!
என்னிலை வரினும்
இழப்புகள் உறினும்
இழிந்தவரைப்போய்க் கெஞ்சாதே!
உண்மையும் பொய்யும்
உறழ்ந்தன தம்பி!
உருவைக் கண்டு மருளாதே!
பெண்மையும் ஆண்மையும்
பிறழ்ந்தன தம்பி!
பேச்சைக் கண்டே வெருளாதே!
மானமும் நாணமும்
மறைந்தன தம்பி!
மக்களை உருவால் மயங்காதே!
கூனமும் குழைவும்
கொழுத்தன தம்பி!
கொடுமையை எதிர்க்கத் தயங்காதே!
-1984